Search This Blog

Tuesday, 2 August 2016

பேன், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட


உளுத்தம் பருப்பை வேக வைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து பின், குளிக்கவும். பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெய் அல்லது பாலில் கலந்து தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கி, முடி மிருதுவாக இருக்கும்.

வெற்றிலையை அம்மியில் அரைத்து விழுதாக்கி, தலையில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின் குளித்தால், உடல் சூடு தணிவதுடன், நரை நீங்கி, முடி மிருதுவாக இருக்கும். மேலும் தலையில் புண் இருந்தாலும் குணப்படுத்தும். பொடுகு நீங்கும்.


கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலையில் தேய்த்து வர நரைமுடி குறையும்.

No comments:

Post a Comment

Translate