1.
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2.
குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல்
நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
3.
எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு
மங்கினால் வாரத்திற்கு ஒருமுறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வந்தால் வெள்ளி
பாத்திரங்கள் போல மின்னும்.
4.
பிளாஸ்டிக் வாளி ஓட்டையாகி விட்டால் அதை
கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது
படியச் செய்தால் ஓட்டை அடைபடும்.
5.
பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி
வைக்கக்கூடாது.
6.
வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே
கொஞ்சம் பெருங்காயத்தூளைத் தூவினால் எறும்புத்தொல்லை இருக்காது.
7.
ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள்
உப்பு கலந்து தெளித்தால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
8.
பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தை
பொடி செய்து தூவலாம்.
9.
எப்பொழுதாவது உபயோகிக்கும் ஷூக்களில் ரச கற்பூர
உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10.
சிறு ஷாம்பு கவர்கள் காலியானதும் அவற்றை ஊறவைக்கும்
துணிகளோடு போட்டுவைத்தால் துணி வாசனையாக இருக்கும்.
11.
துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ
பட்டுவிட்டால் அவற்றைத் துவைக்கும்போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டு
அலசினால் கறைகள் போய்விடும்.
12.
கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட்
அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க
வேண்டும்.
13.
பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி, தோசை மாவு
புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது வாளியில்
வைக்கவும்.
14.
பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு காய்கறிகளின் மீது
ஈரத்துணியைப் போட்டு மூடி வைத்தால் வாடாமல் இருக்கும்.
15.
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி தண்ணீர்க்
குட்த்தின் மேல் வைத்திருந்தால் 10 நாள் வரை புதிதாகவே இருக்கும்.

No comments:
Post a Comment